குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகின்ற ஏப்ரல் 4 -ஆம் தேதி நெதர்லாந்து பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவரை இந்தியாவுக்கான முன்னாள் நெதர்லாந்து தூதர் வேணு ராஜாமணி சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏப்ரல் - 4 தேதி முதல் 3 நாள்கள் நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, நெதர்லாந்து அதிபரையும், பிரதமரையும் சந்திக்கிறார்.
இதை முன்னிட்டு, நெதர்லாந்துக்கான முன்னாள் இந்திய தூதரும், கேரள அரசின் சிறப்பு அதிகாரியுமான வேணு ராஜாமணி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை திங்கள்கிழமை சந்தித்து தன்னுடைய நெதர்லாந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 2019 -ஆம் ஆண்டு நெதர்லாந்தின் மன்னர் வில்லியம் அலெக்சாண்டர், ராணி மேக்சிமா ஆகியோர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தனர். அந்தச் சமயத்தில் இந்தியாவுக்கான தூதராக வேணு ராஜாமணி இருந்தார்.