எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!

தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 11:02 am IST

நேரத்துக்கு ஏற்றார்போல சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவது மக்கள் அனைவரும் அறிந்ததே, தற்போது தேர்தல் நேரம் என்பதால், வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் விதவிதமான மோசடிகள் நடப்பது குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை, பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்யவும் என்றும், உங்கள் வாக்காளர் எண், பதிவேற்றப்பட்ட பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும் என்பது போன்று விதவிதமாக எஸ்எம்எஸ்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இதுபோன்ற எந்தவொரு தகவலையும் தேர்தல் ஆணையம் அனுப்பாது என்றும், மக்கள் இது குறித்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் காவல்துறையால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள வயதானவர்கள், விழிப்புணர்வு பெறாதவர்களுக்கும் இது குறித்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, புதிய வாக்காளர் பட்டியலில், உங்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தீர்களே அது ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணம் அறிய என்று பல விதங்களில் குறுஞ்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

எனவே, வாக்காளர் அடையாள அட்டை குறித்து குறுஞ்செய்திகள் எது வந்தாலும், அதிலிருக்கும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம், தேர்தல் ஆணையம், தனிப்பட்ட முறையில் யாருக்கும் இதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்பாது, இணையதள மோசடியாளர்கள், இதுபோன்ற லிங்குகளை அனுப்பி, உங்கள் செல்போனில் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கு மற்றும் பிற விவரங்களைத் திருடி சைபர் மோசடியில் ஈடுபடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப நிலை அறிவது என அனைத்தையும் உரிய இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளவும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Summary

People are advised to be cautious if they receive an SMS in the name of voter card update as it is election time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.