மே 10ல் மும்பை விமான நிலையம் 6 மணி நேரம் மூடல்

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் மே 10-ம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
மே 10ல் மும்பை விமான நிலையம் 6 மணி நேரம் மூடல்
Published on
Updated on
1 min read

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் மே 10-ம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பருவ மழைக்கு முந்தைய பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு ஆகிய விமான நடவடிக்கைகளுக்காக, , RWYs 14/32 மற்றும் 09/27 ஆகிய இரண்டு ஓடுபாதைகளும் 10-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஓடுபாதைகளின் பராமரிப்பு பணிகள் மாலை 5 மணிக்கு முடிந்ததும், அன்றைய தினம் வழக்கமான செயல்பாடுகள் தொடங்கும்.

சிரமங்களைத் தவிர்க்க அனைத்து பயணிகளும் மே 10ம் தேதியன்று விமான அட்டவணையை அந்தந்த விமான நிறுவனங்களுடன் சரிபார்க்குமாறு சத்ரபதி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com