மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் மே 10-ம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பருவ மழைக்கு முந்தைய பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு ஆகிய விமான நடவடிக்கைகளுக்காக, , RWYs 14/32 மற்றும் 09/27 ஆகிய இரண்டு ஓடுபாதைகளும் 10-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஓடுபாதைகளின் பராமரிப்பு பணிகள் மாலை 5 மணிக்கு முடிந்ததும், அன்றைய தினம் வழக்கமான செயல்பாடுகள் தொடங்கும்.
சிரமங்களைத் தவிர்க்க அனைத்து பயணிகளும் மே 10ம் தேதியன்று விமான அட்டவணையை அந்தந்த விமான நிறுவனங்களுடன் சரிபார்க்குமாறு சத்ரபதி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.