ரமலான் கொண்டாட்டத்தின் இடையே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்ததால் அப்பகுதியில் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஜலோரி கேட் பகுதி அருகே 3 நாள் பரசுராம் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனிடையே இன்று முஸ்லிம் சமூகத்தினருக்கான ரமலான் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் ஜலோரி கேட் அருகே திங்கள் இரவு இரு தரப்பினரும் தங்கள் கொடியினை ஏற்ற முனைப்பு காட்டியதால் மோதல் உருவானது. பின்னர் அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி தடியடி நடத்தினர்.
இந்த மோதலில் போலீஸ் பூத் ஒன்றின் மீதும் தாக்குதல் நடைபெற்றது. இதில் 4 போலீசார் காயமடைந்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மோதலைத் தடுக்க அந்த பகுதி முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட ஜோத்பூரில் அன்பு மற்றும் சகோதரத்துவத்தைக் காக்க அனைத்து சமூகத்தினரும் அமைதி காக்குமாறு முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று இரவைத் தொடர்ந்து இன்று(செவ்வாய்) காலையும் இரு தரப்பினரிடையே கல் வீச்சு சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்கசிவால் 20 வீடுகளில் மின்சாதனங்கள் தீப்பிடித்து சேதம்

பலாப்பழம் தலையில் விழுந்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

நாய்களால் துரத்தப்பட்ட 2 வயது பெண் மான் மீட்பு

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



