இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உ.பி.யில் வேலியே பயிரை மேய்ந்த அவலம்: அதுவும் காவல்நிலையத்தில்

13 வயது சிறுமி, நான்கு பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், காவல்நிலையத்துக்கு வந்த சிறுமியை காவல்நிலைய காவலரும் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்திருக்கிறது.

News image
சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
Updated On :4 மே 2022, 12:12 pm

PTI

லலித்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் அருகே, 13 வயது சிறுமி, நான்கு பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், காவல்நிலையத்துக்கு வந்த சிறுமியை காவல்நிலைய காவலரும் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்திருக்கிறது.

இது தொடர்பாக சிறுமியின் உறவினப் பெண் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், காவல்நிலைய காவலர் தலைமறைவாக உள்ளார். மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற காவலர்கள் அனைவரும், இந்த காவல்நிலையத்திலிருந்து வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டிருப்பதாக காவல்துறை டிஐஜி தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியினர், இனிமேல் பெண்கள் தங்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்படும்போது அவர்கள் புகார் கொடுக்க எங்கேச் செல்வார்கள், யாரைத்தான் நம்புவார்கள் என்று கேட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், லலித்பூரிலிருந்து தனது பெண்ணை போபாலுக்குக் கடத்திச் சென்ற நான்கு பேர் அங்கு மூன்று நாள்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு பெண்ணை பாலி காவல்நிலையம் அருகே விட்டுச் சென்றுள்ளனர். அங்குச் சென்ற சிறுமியை, காவலர் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார் என்கிறார் கண்ணீரோடு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.