12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவோவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம்: ஆதார் பூனாவல்லா

12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கான கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொள்ளலாம் என்று
ஆதார் பூனாவல்லா
ஆதார் பூனாவல்லா
Published on
Updated on
1 min read

புனே: 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கான கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொள்ளலாம் என்று  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா புதன்கிழமை கூறினார்.

பெரியவர்களுக்கு கோவோவேக்ஸ் கிடைக்குமா என்ற கேள்விக்கு, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவோவேக்ஸ் கிடைக்கும் என்று பூனாவல்லா சுட்டிரையில் கூறியுள்ளார்.

கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் குழந்தைகளுக்காகக் கிடைக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஆகும். இது ஐரோப்பாவிலும் விற்கப்படுகிறது மற்றும் 90 சதவீத செயல்திறன் கொண்டது. இது நமது குழந்தைகளைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளது என்று அவர் சுட்டிரையில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி.ஐ) 12-17 வயதிற்குட்பட்டோருக்கான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில், அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக அரசாங்கம் கோவோவேக்ஸை அனுமதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com