நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ம.பி.யில் அணையில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி: நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். 

News image
Updated On :5 மே 2022, 7:19 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். 

சிந்த்வாரா மாவட்டத்தில் ஒரு சிறுவன் உள்பட நான்கு பேர் உள்ள மச்சகோரா அணையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் புனர்வாஸ் காலனியில் வசிப்பவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் டிவிட்டர் பதிவில், 

சிந்த்வாராவின் மச்சகோரா அணையில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இதயம் முழுவதும் வேதனையில் உள்ளது. அப்பாவி குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையவும், அந்த குடும்பத்தினருக்கு அந்த வேதனையைத் தாங்கும் வலிமையும் கொடுக்க பிரார்த்திக்கிறேன். 
என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மற்றொரு ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.