டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

30 ஆண்டுக்கு முந்தைய புகைப்படத்தைப் பகிர்ந்த முதல்வரின் மனைவி: என்ன விசேஷம்?

30 ஆண்டுக்கு முந்தைய புகைப்படத்தைப் பகிர்ந்த முதல்வரின் மனைவி: என்ன விசேஷம்?

News image
30 ஆண்டுக்கு முந்தைய புகைப்படத்தைப் பகிர்ந்த முதல்வரின் மனைவி: என்ன விசேஷம்?
Updated On :1 பிப்ரவரி 2024, 9:10 am

DIN

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானின் மனைவி, சாதனா, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் ஒன்றை சுட்டுரையில் பகிர்ந்துள்ளார்.

சிவ்ராஜ் சிங் சௌஹான் - சாதனா தம்பதியர் வியாழக்கிழமை  தங்களது 30-ஆவது திருமண நாளை கொண்டாடிய நிலையில் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் சாதனா, எனது வாழ்க்கைத் துணையுடன், எப்படி 1992 முதல் 2022ஆம் ஆண்டு வரை நமது வாழ்க்கைப் பயணம் சென்றுள்ளது என்று எனக்குத் தெரியவேயில்லை என்று பதிவிட்டுள்ளார்.

இதுபோல, முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானும் தனது சுட்டுரைப் பக்கத்தில் 30வது திருமண நாளை முன்னிட்டு, நமது கலாசாரத்தில் திருமணம் என்பது மிகவும் புனிதமான சடங்கு, இரண்டு உயிர்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்காக. ஒரு குடும்பஸ்தனாக இருந்துகொண்டு, இந்த சமூகத்துக்காவும் மாநிலத்தின் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து 30 ஆண்டுகள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2006ஆம் ஆண்டு தனது கணவருக்காக பிரசாரத்தில் ஈடுபட்டபோதுதான், சாதனா வெளியுலகப் பார்வைக்கு அறியப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.