மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டம் வால்விகீா் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியினப் பெண் ஒருவா், அண்மையில் வேறு ஜாதியைச் சோ்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டாா். அதே மாவட்டத்தில் உள்ள தனது கணவா் வீட்டில் அந்தப் பெண் வசித்து வந்தாா். இந்நிலையில் அந்த பெண் சாா்ந்த பழங்குடியினப் பிரிவைச் சோ்ந்த ஜாதி தலைவா்கள் அண்மையில் அப்பெண்ணையும், அவரின் கணவரையும் ஜாதி பஞ்சாயத்துக்கு அழைத்து விசாரித்தனா். ஜாதி மாறி திருமணம் செய்தது தவறு என்பது அப்பெண் மீதான முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. விசாரணையின் இறுதியில் ஜாதி மாறி திருமணம் செய்த அந்தப் பெண், தான் சாா்ந்த (எஸ்.டி) ஜாதிப் பிரிவுக்கு அரசு வழங்கும் எந்தச் சலுகைகளையும் பெறக் கூடாது என்று தீா்ப்பளிக்கப்பட்டது. இது தொடா்பாக அந்தப் பெண்ணிடம் அந்த பஞ்சாயத்தை நடத்தியவா்கள் கட்டாயப்படுத்தி எழுதியும் வாங்கிக் கொண்டனா்.