இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்
Published on
Updated on
1 min read

இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராகவுள்ள சுஷில் சந்திரா, மே 14ஆம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். இதனைத் தொடர்ந்து, மே 15ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்கவுள்ளார்.

இந்திய ஆட்சிப் பணியில் 1984ஆம் ஆண்டு பிகார் மாநிலத்தில் சேர்ந்த ராஜீவ் குமார், மத்திய நிதித்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2020ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com