குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்தூரில் பத்திரிகையாளர் தூக்கிட்டுத் தற்கொலை 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 40 வயது பத்திரிகையாளர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :12 மே 2022, 11:21 am

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 40 வயது பத்திரிகையாளர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக லசுடியா காவல் நிலையப் பொறுப்பாளர் சந்தோஷ் தூதி கூறுகையில், 

பத்திரிகையாளர் கணேஷ் திவாரி புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் தற்கொலைக்கான எந்த ஆதாரமும், பொருளும் சிக்கவில்லை. 

பல்வேறு செய்தி சேனல்களில் பணியாற்றிய திவாரி, லசுடியா காவல் நிலையத்தைச் சேர்ந்த சில பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் குறித்து கடந்த 5 நாள்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில்  செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 

சாலையோர உணவக உரிமையாளரைப் பற்றி எதிர்மறையான செய்தியை வெளியிட்டதாகக் கூறி திவாரி மற்றும் நான்கு பேர் மீது லசுடியா காவல் நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மிரட்டி பணம் பறித்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் அவரைக் கைது செய்தனர்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் ஜாமீன் பெற்ற திவாரி, தனிப்பட்ட வெறுப்பு காரணமாக லாசுடியா போலீசார் தனக்கு எதிராக தவறான எஃப்ஐஆர் பதிவு செய்ததாக குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், நேற்றிரவு அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவல்துறையினர் இதுதொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.