ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆக்கிரமிப்பு  கட்டடங்கள் இடிப்பு: ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடனான கேஜரிவால் ஆலோசனை ரத்து

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ன.

News image
Updated On :14 மே 2022, 9:52 am

DIN

புது தில்லி: மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் நான்கு அடுக்குமாடி அலுவலக கட்டட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்ததை அடுத்து, சனிக்கிழமை நடைபெறவிருந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ன.

துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திறந்து வைக்க இருந்த மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட் திறப்பு விழா உள்பட  பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேரிவால், தில்லியில் பாஜக ஆளும் நகராட்சிகளால் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு  கட்டடங்கள் மற்றும் அனுமதி பெறாத சட்டவிரோத கட்டங்களை இடிக்கும் பணிகளை தடுப்பது குறித்து கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தனது இல்லத்தில் இன்று சனிக்கிழமை முக்கியமான ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ரவுட்டர்களை தயாரித்து அசெம்பள் செய்யும் நிறுவனத்தின் அலுவலகம் உள்ள நான்கு அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டடை அடுத்து ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடனான முதல்வர் கேஜரிவால் நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் சிசோடியா ஆகியோர் தீ விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.

பின்னர், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும், சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.