மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ம.பி.: 3 காவலர்கள் சுட்டுக் கொலை

மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் வேட்டையாடுபவர்கள் மூன்று காவல்துறை அதிகாரிகளை சுட்டு கொன்றனர்.

News image

கோப்புப்படம்

Updated On :14 மே 2022, 12:54 pm

DIN

போபால்: மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் வேட்டையாடுபவர்கள் மூன்று காவல்துறை அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.

காவல் துறையினரின் கூற்றுப்படி, சனிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் நான்கு இருசக்கர வாகனங்களில் 6 வேட்டையாடுபவர்கள் ஆரோன் பகுதியில்  மயில்களை வேட்டையாடி கொண்டிருந்தனர்.

ஆயுதம் ஏந்திய வேட்டையாடுபவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மூன்று காவல்துறை குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன.

வேட்டையாடுபவர்கள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டதால், வேட்டையாடுபவர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மற்ற காவல்துறை குழுக்கள் அவர்களைப் பிடிக்க முயன்ற போதிலும், வேட்டையாடுபவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவத்தை அடுத்து, முதல்வர் சிவராஜ் சிங் செளகான் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஆகியோர்  மூத்த காவல்துறை  அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினர்.

காவல்துறையினர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது,  வேட்டையாடுபவர் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த  காவல்துறை அதிகாரிகள் குடும்பத்திற்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.