தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

புத்த பூர்ணிமா: குடியரசுத் தலைவர் வாழ்த்து

புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

Updated On :15 மே 2022, 8:31 pm IST

புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “புத்த பூர்ணிமாவின் மங்களகரமான தருணத்தில், உலகெங்கிலும் உள்ள அனைத்து சக குடிமக்களுக்கும் புத்தரைப் பின்பற்றுபவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாத்மா புத்தர், அகிம்சை, அன்பு, கருணை ஆகியவற்றை மக்களுக்குப் போதித்தார். கொந்தளிப்பு நிறைந்த உலகில், அவரது போதனைகள் முன்பை விட இன்று மிகவும் பொருத்தமானவையாக உள்ளன. மகாத்மா புத்தரின் போதனைகள் முழு மனித இனத்தையும் தார்மீக விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை நோக்கி உழைக்கத் தூண்டுகிறது. 

கருணை மற்றும் சகிப்புத்தன்மையின் பாதையில் செல்ல மக்களை அவர் வழிநடத்தினார். மகாத்மா புத்தர் காட்டிய "அஷ்டாங்கி மார்க்கத்தை" பின்பற்றி, நல்லொழுக்கமுள்ள வாழ்க்கையை நடத்தி, அமைதியான, இணக்கமான மற்றும் வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்போம் என்று உறுதி கொள்வோம்’.  இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.