6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அருணாசலில் நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

அருணாசலில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :16 மே 2022, 12:36 pm

DIN

அருணாசலில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது

இந்த நிலச்சரிவு குறித்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, ” பஞ்சாபி தாபா அருகில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தகரத்தால் மேற்கூரை அமைக்கப்பட்ட மூங்கில் வீட்டில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டுள்ளார். அவரது நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன” என கூறியுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்கள் நாகேன் பார்மன் ( 50 வயது ), தபாஸ் ராய் ( 15 வயது) ஆவர். 35 வயது நிரம்பிய குஷம் ராயினை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், நிலச்சரிவிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உரிய உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபடத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.