குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டக்காரர்களில் பலர் காய்கறிகளால் செய்யப்பட்ட மாலைகளை அணிந்திருந்தனர். சிலர் சிலிண்டர்கள் மற்றும் எரிபொருள் விநியோகிப்பாளர்களின் கட்அவுட்கள் மற்றும் ஆளும் பாஜக மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
கட்சியின் ராஜ்கோட் நகரத் தலைவர் அர்ஜூன் கட்டாரியா தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பெண் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
மக்கள் துயரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் பாஜக அரசை எழுப்புவதற்காகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
சமையல் சிலிண்டர்கள், உடைகள், யூரியா என அனைத்தும் இப்போது விலை உயர்ந்ததாக இருக்கிறது என்று கட்டாரியா கூறினார்.
இதுதொடர்பாக கட்டாரியா, 2 பெண்கள் உள்பட 30 காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாக பிரத்யும்னா நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.