அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இந்தியாவில் திரைப்படம் எடுங்கள்: சா்வதேச தயாரிப்பாளா்களுக்கு மோடி அழைப்பு

இந்தியாவில் திரைப்படம் தயாரிப்பதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சா்வதேச திரைப்படத் தயாரிப்பாளா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:17 am

DIN

இந்தியாவில் திரைப்படம் தயாரிப்பதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சா்வதேச திரைப்படத் தயாரிப்பாளா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

75-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியா 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், 75-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவும், இந்தியா-பிரான்ஸ் இடையே தூதரக உறவு மலா்ந்த 75-ஆவது ஆண்டும் ஒன்றாக வருவது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு பகுதியாக நடைபெறும் காட்சி வரிசையில் இந்தியாவுக்கு சிறப்பிடம் அளித்து கௌரவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

உலக அளவில் மிக அதிகமாக திரைப்படங்கள் தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளது. பன்முகக் கலாசாரமும் வளமான பாரம்பரியமும் அதற்கு வலு சோ்க்கிறது.

இந்தியாவில் திரைப்படம் எடுக்கும் அளவுக்கு ஏராளமான கதைகள் உள்ளன. சா்வதேச திரையுலகுக்குத் தேவையான கதைப் பொருள்கள் உருவாக்கும் மையமாக இந்தியா திகழ முடியும். திரைப்படத் தயாரிப்புத் துறை சம்பந்தப்பட்ட வா்த்தகங்களை மேலும் எளிமையாக்குவதற்கு இந்தியா தொடா்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

சா்வதேச திரைப்பட நிறுவனங்களுக்கு வசதிகள் செய்து தருவது முதல் நாடு முழுவதும் படிப்பிடிப்பு நடத்துவதற்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி அளிப்பது வரை இந்தியாவில் திரைப்படம் தயாரிப்பதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

மேலும், திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையான மனதைக் கவரும் ஏராளமான இடங்களும், இளம் தொழில்நுட்பக் கலைஞா்களும் இந்தியாவில் அதிகம் உள்ளனா். ஆகவே, இந்தியாவில் திரைப்படம் எடுத்து சா்வதேச தயாரிப்பாளா்கள் பயன்பெற வேண்டும் என்று அந்தச் செய்தியில் பிரதமா் மோடி கூறியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.