சார்தாம் யாத்திரைக்கான பதிவு கட்டாயம்: உத்தரகண்ட் அரசு

சார்தாம் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரகண்ட அரசு அறிவுறுத்தியுள்ளது. 
சார்தாம் யாத்திரைக்கான பதிவு கட்டாயம்: உத்தரகண்ட் அரசு
Published on
Updated on
1 min read

சார்தாம் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரகண்ட அரசு அறிவுறுத்தியுள்ளது. 

உத்தரகண்ட் சுற்றுலாத் துறையின் போர்ட்டலில் உள்ள பதிவு இடங்களைச் சரிபார்த்த பின்னரே பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

பதிவு செய்யாமல் எந்த பக்தர்களும் ரிஷிகேஷ்க்கு மேல் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பக்தர்கள் பதிவு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பை சுற்றுலாத் துறை நிர்ணயித்துள்ளது. 

சார்தாம் வரும் பக்தர்கள் பதிவு இருப்பை சரிபார்த்த பின்னரே பயணிக்க வேண்டும். இது தவிர யாத்திரையின் போது பயணிகள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக மே 11ஆம் தேதி, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் சார்தாம் யாத்திரைக்கான பதிவு கட்டாயம் என்று அறிவித்தார்.

கரோனா காரணமாக கடந்த 2 வருட இடைவெளிக்குப் பிறகு சார்தாம் யாத்திரை மே 3ஆம் தேதி தொடங்கியது. ஆனால், கடந்தாண்டு போல் கரோனா எதிர்மறை அறிக்கை கொண்டுவர கட்டாயப்படுத்தப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com