ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கையிருப்பில் 17 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது வரை 17 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :18 மே 2022, 2:53 pm

DIN


நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது வரை 17 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு சார்பில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 193.53 கோடி கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் தற்போதுவரை 17 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 

2021 ஜூன் 21 முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதன் விளைவாக 75 சதவிகிதம் தடுப்பூசிகளை உற்பத்தி நிறுவனங்கள் வழங்கின. அனைத்துப் பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை படிப்படியாக மத்திய அரசு வேகப்படுத்தியது. 

தடுப்பூசி செலுத்தும் பணிகள் 2021 ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.