92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 12 தொழிலாளர்கள் பலி

குஜராத்தின் மார்பி மாவட்டத்தில் உள்ள உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

News image
Updated On :18 மே 2022, 9:55 am

DIN

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் அமைந்துள்ள சாகர் உப்பு தொழிற்சாலையில் சாக்குகளில் உப்பு நிரப்பும் பணி நடந்துகொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.