டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

லக்னௌவில் விரைவில் வருகிறது நாய்களுக்கான பூங்கா

உத்தரப் பிரதேசத்தில் முதன்முறையாக நாய்களுக்கான பூங்கா அமைக்க லக்னௌ மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:17 am

DIN

உத்தரப் பிரதேசத்தின், லக்னௌவில் முதன்முறையாக நாய்களுக்கான பூங்கா அமைக்க லக்னௌ மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

இந்த பூங்காவில் நாய்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும், விளையாடுவதற்கும் வசதியாக அமைக்கப்படுகிறது. நாயின் உரிமையாளர்கள், தங்கள் நாய்களுக்கு பயிற்சியாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம். 

லக்னௌ மேம்பாட்டு ஆணையத்தின் (எல்டிஏ) அதிகாரிகளின் கூற்றுப்படி, 

பூங்காவிற்கான முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு, அனுமதிக்காக காத்திருக்கிறது. பூங்கா ரூ.15 முதல் 25 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. 

கோமதி நகர் விரிவாக்கப் பகுதியில் இத்திட்டத்திற்காக சுமார் 10 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர்.

நாய்கள் பூங்காவிற்குள் நுழையும் முன் உரிமம் வைத்திருப்பதை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லக்னெளவில், தற்போது 4,000க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன, மேலும் பூங்காக்களில் நாய்கள் நுழைவது தொடர்பான சர்ச்சை கவலையளிக்கும் வழக்கமான விவாதங்களாகவே இருந்து வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.