பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியமா?: மே 25க்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

பாதுகாப்புத்துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியமா?: மே 25க்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
Published on
Updated on
1 min read

பாதுகாப்புத்துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாதாந்திர ஓய்வூதிய திட்டம் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக ஓய்வூதியம் பெறுபவர்களிடம் சான்றிதழ் கோரியுள்ளது. 

மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக மே 17 ஆம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளை சரி செய்ததில், 43,774 பயனாளர்கள் தங்களின் சரியான விவரங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகள் வழியாகவோ சரிவர தாக்கல் செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பழைய முறையில் ஓய்வூதியம் பெறும் சுமார் 1.2 லட்சம் ஓய்வூதியதாரர்கள், தங்களின் ஆண்டு அடையாளத்தை சரிவர பூர்த்தி செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது. 

எனவே வரும் 25 ஆம் தேதிக்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com