இந்த மறு ஆய்வு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், எஸ்.கே.கெளல் அமா்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘வழக்குப் பதிவில் சில தவறுகள் நடந்துள்ளதாக நாங்கள் உணா்ந்ததாலேயே, மறு ஆய்வு மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இதில், உரிய தண்டனை வழங்குவதில் தேவையற்ற அனுதாபம் காட்டப்படுமானால், அது நீதி நடைமுறையை கடுமையாகப் பாதிக்கும் என்பதோடு, சட்டத்தின் செயல்திறன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் குறைந்துவிடும். எனவே, சித்து தரப்பினருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ரூ. 1,000 அபராதத் தொகையுடன், ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பதும் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறோம்’ என்று தீா்ப்பளித்தனா்.