
நேபாளத்தில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக பாரிசை தளமாகக் கொண்ட விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் தலைநகரில் 6 நகராட்சிகளில் இதுவரை 932 பன்றிகள் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக காத்மாண்டு போஸ்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் வியாழன் மாலை நிலவரப்படி பன்றிக் காய்ச்சல் பாதிப்பு 1,426 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நோய் ஆசியா, கரீபியன், ஐரோப்பா மற்றும் பசிபிக் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. இது வீட்டு மற்றும் காட்டுப் பன்றிகளைப் பாதிக்கிறது.
உலகளவில், 2005 முதல் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மொத்தம் 73 நாடுகளில் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.