மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில், இந்திய எல்லை வழியே ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :20 மே 2022, 9:49 am


ஜம்மு-காஷ்மீரில், இந்திய எல்லை வழியே ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். 

குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் செக்டார் பகுதியில் உள்ள இந்திய  எல்லை வழியே ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டு, ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர். 

தர்ஷன் போஸ்ட் அருகே கட்டுப்பாடு கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதைக் கவனித்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஊடுருவிய பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றவர்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.