ஸ்ரீநகரில் கைதான 2 பயங்கரவாதிகளிடம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான இருவரிடம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள், 300 தோட்டாக்கள், 30 இதழ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க- ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீநகரில் கைதான பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.