பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள், காவலர் பலி

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், ஒரு ஜம்மு காவலரும் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :25 மே 2022, 6:44 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், ஒரு ஜம்மு காவலரும் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். 

இந்நிலையில், இருதரப்பினருக்கு நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் மற்றும் ஒரு காவலர் உயிரிழந்துள்ளனர். 

பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்பட பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டலத்தின் காவல் அதிகாரி ஜெனரல் விஜய் குமார் ட்வீட் செய்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.