அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உ.பி,யில் 12-14 வயதுடைய 90 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி

உத்தரப் பிரதேசத்தில் 12-14 வயதுக்குட்பட்ட 90 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :25 மே 2022, 12:00 pm

DIN

உத்தரப் பிரதேசத்தில் 12-14 வயதுக்குட்பட்ட 90 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, 

இது மற்றொரு மைல்கல்,  நாட்டில் தடுப்பூசி இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 

உத்தரப் பிரதேசத்தில் 12 முதல் 17 வயது வரை உள்ள அனைத்து சிறார்களுக்கும் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதுவரை மாநிலத்தில் 15-17 வயதுடைய  2,41,42,318 சிறார்களுக்கும், 12-14 வயதுடைய 91,31,512 சிறார்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் செலுத்தப்பட்ட 192 கோடி தடுப்பூசிகளில் குறைந்தது 32.46 கோடி உ.பி.யைச் சேர்ந்தவையாகும். 

மாநிலத்தில் சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தவும், உ.பி.யில் தடுப்பூசி அளவுகள் போதுமான அளவு கிடைப்பதையும், தகுதியானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்புடைய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.