தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் தீா்ப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஹரியாணா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும்

News image
Updated On :27 மே 2022, 7:06 pm

DIN

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஹரியாணா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஹரியாணாவில் கடந்த 1999, ஜூலை 24 முதல் 2005, மாா்ச் 5 வரை முதல்வராகப் பதவி வகித்தவா் ஓம் பிரகாஷ் செளதாலா (86). இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவரான இவா், கடந்த 1993 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.09 கோடி வரை சொத்துகளை தனது பெயரிலும், தன் குடும்ப உறுப்பினா்கள் பெயரிலும் வாங்கியதாகவும், இது அவரது வருமானத்தைவிட 189.11 சதவீதம் அதிகம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து கடந்த 2010, மாா்ச் 26-இல் தில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது தொடா்பான விசாரணை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் ஓம் பிரகாஷ் செளதாலா மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவரை குற்றவாளி என கடந்த வாரம் நீதிபதி அறிவித்தாா். அப்போது கூடுதல் வருமானத்துக்கான ஆதாரத்தை அவா் தெரிவிக்க தவறிவிட்டதாக நீதிபதி குறிப்பிட்டாா்.

தொடா்ந்து தண்டனை விவரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன்படி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்ப்பு வழக்கில் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி விகாஸ் துல் தீா்ப்பளித்தாா்.

அத்துடன் அவருக்குச் சொந்தமான 4 சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

2-ஆம் எண் அறையில் செளதாலா: இதைத் தொடா்ந்து, திகாா் சிறைக்கு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஓம் பிரகாஷ் செளதாலா அழைத்து வரப்பட்டாா். சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து, 2-ஆம் எண் அறையில் இரண்டு கைதிகளுடன் அவா் அடைக்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே ஆசிரியா் தோ்வு முறைகேட்டில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஓம் பிரகாஷ் செளதாலா, இதே அறையில் அடைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 2-ஆம் தேதிதான் சிறையிலிருந்து விடுதலையானாா்.

ஹரியாணாவில் கடந்த 2000-ஆம் ஆண்டில் 3,206 இளநிலை ஆசிரியா்களை பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் ஓம் பிரகாஷ் செளதாலா, அவரின் மகன் அஜய் செளதாலா, ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் குமாா் உள்ளிட்ட 53 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணை செலவுகளை ஈடுகட்ட சிபிஐக்கு ரூ. 5 லட்சம் செலுத்த உத்தரவு

முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலா மீதான வழக்கில், விசாரணையின்போது சிபிஐக்கு ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட அவா் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டுமென தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை செலவுகளை ஈடுகட்டுவதற்காக அவா் மேலும் ரூ.5 லட்சத்தை சிபிஐக்கு செலுத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.