மே 28-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி மே-28 (சனிக்கிழமை) குஜராத் பயணம் மேற்கொள்கிறார்.


பிரதமர் நரேந்திர மோடி மே-28 (சனிக்கிழமை) குஜராத் பயணம் மேற்கொள்கிறார்.
நாளை காலை 10 மணியளவில் ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதுஸ்ரீ கேடிபி பல்நோக்கு மருத்துவமனையை பிரதமர் பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார்.
அதன்பிறகு மாலை 4 மணியளவில் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களுடன் உரையாற்றுகிறார். அங்கு அவர் கலோலில் கட்டப்பட்ட நானோ யூரியா(திரவ) ஆலையையும் திறந்து வைக்கிறார்.
பிரதமர் வருகை தரும் மாதுஸ்ரீ கேடிபி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஸ்ரீ படேல் சேவா சமாஜால் நிர்வகிக்கப்படுகிறது. இது உயர்தர மருத்துவ உபகரணங்களுடன், பிராந்திய மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை வழங்கும். இந்தப் பயணத்தைத் தொடர்ந்து, பொது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...