போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஜம்மு: ஆற்றில் மினி பேருந்து கவிழ்ந்ததில் இருவர் பலி

ஜம்முவின் தாவி ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :28 மே 2022, 7:30 am

ஜம்முவின் தாவி ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 

வெள்ளியன்று இரவு பிக்ரம் சௌக் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தாவி பாலத்தைக் கடக்கும்போது வேகமான வந்த மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

பாலத்தின் கான்கிரீட் வேலியை உடைத்துக்கொண்டு,  மினி பேருந்து ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 பேரின் உடல்கள் தேடி வருகின்றனர்.

மேலும், இன்று காலை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டால் பல்லாயின் பாலத்தில் வேகமாகச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 27 பயணிகள் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்தனர். 

ஜம்முவில் இருந்து தோடா மாவட்டத்திற்கு பேருந்து சென்றுகொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர், அவர்களில் 6 பேர் சிறப்பு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.