திரிபுரா மாநிலத்தில் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியில் ஈடுபடபோது பாஜக தொண்டர்கள் வழிமறித்து பிரச்னையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி களைத்தனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.