அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

'வீட்டிலிருந்து பணிபுரியுங்கள்' - தில்லி அமைச்சர் வேண்டுகோள்! ஏன் தெரியுமா?

தில்லியில்  காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால் மக்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு தில்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

News image

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய்

Updated On :2 நவம்பர் 2022, 10:20 am

DIN

தில்லியில்  காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால் மக்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு தில்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தலைநகர் தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் நீடித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுக்கு முக்கியக் காரணம். 

இதனால் காற்று மாசைக் குறைப்பதற்காக அதாவது வாகனங்கள் இயக்கத்தைக் குறைப்பதற்காக அலுவலகத்திற்குச் செல்வோர் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாகனத்தினால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என்று கூறியுள்ளார். 

மேலும், தலைநகர் தில்லியில் 50 சதவீத மாசு, வாகனங்களால்தான் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தில்லியில் இன்று காற்றின் தரம் 354 புள்ளிகளுடன் 'மிகவும் மோசம்' பிரிவில்  உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.