6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அந்தேரி கிழக்கு(மகாராஷ்டிரம்), மோகமா, கோபால்கஞ்ச் (பிகார்), ஆதம்பூர் (ஹரியானா), முனுகோட் (தெலங்கானா), கோலா கோக்ரநாத்(உ.பி.), தாம்நகர்(ஒடிசா) ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் நவம்பர் 6ஆம் தேதி வாக்கெண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதில், தெலங்கானாவின் முனுகோட் மற்றும் மகாராஷ்டிரத்தின் அந்தேரி கிழக்கு தொகுதிகளை கைப்பற்றி தங்களது பலத்தை நிரூபிக்க அரசியல் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.