6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அந்தேரி கிழக்கு(மகாராஷ்டிரம்), மோகமா, கோபால்கஞ்ச் (பிகார்), ஆதம்பூர் (ஹரியானா), முனுகோட் (தெலங்கானா), கோலா கோக்ரநாத்(உ.பி.), தாம்நகர்(ஒடிசா) ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | குஜராத் பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
இடைத்தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் நவம்பர் 6ஆம் தேதி வாக்கெண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதில், தெலங்கானாவின் முனுகோட் மற்றும் மகாராஷ்டிரத்தின் அந்தேரி கிழக்கு தொகுதிகளை கைப்பற்றி தங்களது பலத்தை நிரூபிக்க அரசியல் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


