வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லியில் கடுமையான காற்று மாசு: சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் பணி

தலைநகர் தில்லியில் காற்று மாசு தொடர்ந்து மூன்றாவது நாளாக 'கடுமை' பிரிவில் உள்ளது. 

News image
தலைநகர் தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த சாலைகளில் பீய்ச்சி அடிக்கப்படும் தண்ணீர்
Updated On :5 நவம்பர் 2022, 5:03 am

DIN

தலைநகர் தில்லியில் காற்று மாசு தொடர்ந்து மூன்றாவது நாளாக 'கடுமை' பிரிவில் உள்ளது. 

தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த சில நாள்களாகவே காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் இருந்து வந்த நிலையில் தற்போது 'கடுமை'(severe) பிரிவில் உள்ளது. 

அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுக்கு முக்கியக் காரணம். 

இதனால் காற்று மாசைக் குறைப்பதற்காக, வாகனங்கள் இயக்கத்தைக் குறைப்பதற்காக தில்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை, வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல் என நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

தில்லியில் காற்று மாசு இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக 'கடுமை' பிரிவில் உள்ளது. காற்றின் தரம் 431 புள்ளிகளாக உள்ளது. 

இதையடுத்து தில்லியில் மாசைக் கட்டுப்படுத்த சாலைகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. 

அதுபோல நொய்டாவில் 529, குருகிராமில் 478 புள்ளிகளாக இன்று காலை பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.