வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகன விலையை நவம்பர் 7ஆம் தேதி முதல் உயர்த்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வானது, பயணிகள் வாகன விலையில் 0.9 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் என்றும், கார்களின் மாடல்களைப் பொறுத்து அது மாறுபடும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அதிகரித்திருக்கும் உள்ளீட்டுச் செலவினங்களை இந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒட்டுமொத்த உற்பத்திச் செலவும் கடுமையாக அதிகரித்திருப்பதால், இந்த குறைந்தபட்ச விலை உயர்வு எனும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ, பஞ்ச், நெக்ஸான், ஹாரியெர், சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்களை நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.