கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

‘கேஜிஎஃப் 2’ பாடல் விவகாரம்: காங்கிரஸ் டிவிட்டர் பக்கத்தை முடக்க உத்தரவு

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தின் இசையை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் காங்கிரஸ் டிவிட்டர் கணக்குகளை முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :7 நவம்பர் 2022, 2:48 pm

DIN


இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தின் இசையை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் காங்கிரஸ் டிவிட்டர் கணக்குகளை முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கன்னியாகுமரியில் செப். 7ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நடைப்பயணம் செப். 30ஆம் தேதி அக். 22 ஆம் தேதி வரை கா்நாடக மாநிலத்தில் நடைபெற்றது. அக். 23ஆம் தேதி முதல் தெலங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடா்பான காணொலிகளில் ‘கேஜிஎஃப் 2’ ஹிந்தி திரைப்படத்தின் இசைக்கோா்வையை முன்அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக அந்தத் திரைப்படத்தின் இசைக்கோா்வையை நிா்வகித்து வரும் எம்.ஆா்.டி. இசை நிறுவனத்தின் எம்.நவீன்குமாா், யஷ்வந்த்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகியோா் மீது பதிப்புரிமை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளா்.

இந்த வழக்கை பெங்களூரு நீதிமன்றம், காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவின் டிவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்க டிவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்திற்குள் இன்னும் சற்றுநேரத்தில் நடைப்பயணம் நுழையவுள்ள நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தின் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.