விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காற்று மாசினால் விடுமுறை: தில்லியில் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

தில்லியில் காற்று மாசு காரணமாக விடுமுறை விடப்பட்ட நிலையில், 1 முதல் 5 வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 

News image
Updated On :9 நவம்பர் 2022, 5:59 am

தில்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 

தலைநகர் தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு கடந்த நவம்பர் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தொடக்கப்பள்ளிகள் மட்டும் இன்று திறக்கப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். 

அதன்படி, இன்று தில்லியில் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. 

கடந்த வாரம் தில்லியில் காற்று மாசு 'கடுமை' பிரிவில் இருந்தது. தற்போது 'மிகவும் மோசம்' பிரிவில் (காற்றின் தரம் 329 புள்ளிகள்) உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தில்லியில் காற்று மாசு காரணமாக குழந்தைகள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பள்ளி திறந்ததால், குழந்தைகள் காற்று மாசினால் பாதிக்காத வண்ணம், போதுமான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.