ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஊழல்வாதிகள் இணைந்து கூட்டணி அமைக்க முயற்சி: மோடி சூசகம்

தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஏழைகளிடமிருந்து கொள்ளையடிக்கும் ஊழல் முறையை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.

News image
ஊழல்வாதிகள் இணைந்து கூட்டணி அமைக்க முயற்சி: மோடி சூசகம்
Updated On :12 நவம்பர் 2022, 10:24 am

PTI

ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஏழைகளிடமிருந்து கொள்ளையடிக்கும் ஊழல் முறையை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.

ஹைதராபாத்தில் உள்ள பெகும்பேட் விமான நிலையத்தில் திரண்டிருந்த பாஜகவினரிடையே பேசிய பிரதமர் மோடி, தெலங்கானா மக்களுக்கு நான் ஒரு உறுதியை அளிக்கிறேன், ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் ஊழலை ஒரு  போதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

எனவே, மக்களே, ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிப் பெயரை குறிப்பிடாமல் பேசிய மோடி, ஊழல்வாதிகள், ஒன்றாக இணைந்து கொண்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஊழல் வாதிகள் இணைந்து கூட்டணி அமைக்கப் பார்க்கிறார்கள் என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் ஊழல் எனும் இருள் நீங்கி, குடும்ப ஆட்சி ஒழிந்து, தெலங்கானாவில் நம்பிக்கை எனும் தாமரை மலர் மாநிலம் முழுக்க மலரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை குறிப்பிடும் வகையில் பேசிய மோடி, தெலங்கானா மக்கள், குடும்ப ஆட்சியை விரும்பவில்லைடி. மக்களுக்கான ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.