47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாடு மோதி சேதமடைந்த சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில்

மைசூரு-சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் அரக்கோணம் இடையே கன்றுக்குட்டியின் மீது மோதியதில் சேதமடைந்தது. 

News image
கோப்புப்படம்
Updated On :18 நவம்பர் 2022, 1:30 pm

DIN

மைசூரு-சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் அரக்கோணம் இடையே கன்றுக்குட்டியின் மீது மோதியதில் சேதமடைந்தது. 

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 11ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடக்கி வைத்தார். சென்னை- மைசூரு இடையே பெங்களூரு வழியாக இயக்கப்படும் இந்த ரயிலானது நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயிலாகும். 

இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு மைசூருவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்றுக்குட்டியின் மீது மோதியது. இதில் ரயிலின் முன்பக்க பகுதி சேதமடைந்தது. 

விபத்தின் போது வந்தே பாரத் ரயில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பயணித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கன்றுக்குட்டியின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

அக்டோபர் மாதம் முதல் இதுவரை வந்தே பாரத் ரயில்கள் இதேபோன்று 5 விபத்துகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.