பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு சிறைக்குள் மசாஜ் அளிக்கப்படும் விடியோ விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தா் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோருக்கு எதிரான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை கடந்த வியாழக்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையும் படிக்க | ஒருவேளை உணவுக்கு ரூ.1.3 கோடி ரசீது! வரி மட்டும் ரூ.6.5 லட்சம்!!
இந்நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதியிடப்பட்ட இந்த விடியோவில் கைகளில் சில காகிதங்களை வைத்து படித்துக் கொண்டிருக்கும் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கியுள்ளன.
இதுகுறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில் இது பிசியோதெரபி சிகிச்சை என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.