தில்லி அமைச்சருக்கு சிறைக்குள் மசாஜ்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு சிறைக்குள் மசாஜ் அளிக்கப்படும் விடியோ விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. 
சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் விடியோ
சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் விடியோ
Published on
Updated on
1 min read

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு சிறைக்குள் மசாஜ் அளிக்கப்படும் விடியோ விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. 

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தா் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோருக்கு எதிரான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை கடந்த வியாழக்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செப்டம்பர் 13ஆம் தேதியிடப்பட்ட இந்த விடியோவில் கைகளில் சில காகிதங்களை வைத்து படித்துக் கொண்டிருக்கும் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கியுள்ளன. 

இதுகுறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில் இது பிசியோதெரபி சிகிச்சை என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com