பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிறுபான்மையினரை அடையாளம் காணும் விவகாரம்: 19 மாநிலங்கள் 4 வாரங்களில் நிலைப்பாட்டை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

‘மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண உரிய வழிகாட்டுதலை உருவாக்குவது தொடா்பான விவகாரத்தில் இதுவரை கருத்தை பதிவு செய்யாத 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்

News image
Updated On :22 நவம்பர் 2022, 7:36 pm

DIN

‘மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண உரிய வழிகாட்டுதலை உருவாக்குவது தொடா்பான விவகாரத்தில் இதுவரை கருத்தை பதிவு செய்யாத 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அடுத்த 4 வாரங்களுக்குள் மத்திய அரசிடம் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிறுபான்மையினராக அறிவிப்பதில் மத்திய அரசுக்கு உள்ள தன்னிச்சை அதிகாரம் தொடா்பாக வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடா்பாக மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சகம் சாா்பில் தாக்கல் செய்யப்ட்ட பதில் மனுவில், ‘மத அல்லது மொழி சமூகங்களை அந்தந்த மாநிலத்துக்குள்ளான சிறுபான்மை சமூகமாக மாநில அரசுகளே அறிவிக்க முடியும்’ என்று தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக மாநில அளவில் 3 மாதங்களுக்குள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, அதுதொடா்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனா்.

அதன்படி, மத்திய அரசு தனது நிலை அறிக்கையை கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில், ‘மத்திய அரசு இந்த விவகாரம் தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது. மேலும், அவா்களின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதில், தமிழகம், பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்பட 14 மாநிலங்களும், லடாக் உள்பட 3 யூனியன் பிரதேசங்கள் மட்டுமே தங்களுடைய நிலைப்பாட்டை சமா்ப்பித்துள்ளன’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘இந்த விவகாரம் மிகவும் உணா்வுபூா்வமானது. எனவே, மாநிலங்கள் நிலைப்பாட்டை பதிவு செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், ‘எஞ்சிய 19 மாநிலங்களும் உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் தங்களுடைய நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், இந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 6 வார கால அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.