நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மோடிக்கு எதிராக.. நிதீஷ், தேஜஸ்வியுடன் கூட்டணி சேரும் சிவசேனை?

சிவசேனை கட்சித் தலைவர்களின் ஒருவரான ஆதித்ய தாக்கரே ஆகியோர் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்திக்க பாட்னாவிலுள்ள அவரின் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார். 

News image

தேஜஸ்வி யாதவ் - ஆதித்ய தாக்கரே

Updated On :23 நவம்பர் 2022, 12:45 pm

DIN

சிவசேனை கட்சித் தலைவர்களின் ஒருவரான ஆதித்ய தாக்கரே ஆகியோர் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்திக்க பாட்னாவிலுள்ள அவரின் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார். 

மேலும், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவையும் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, கட்சி செயலாளர் அனில் தேசாய் ஆகியோரும் உடன் இருந்தார். 

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து பிரதமர் மோடிக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பிகார் முதல்வர் நிதீஷ்குமாரும் மக்களவைத் தேர்தலை இலக்காக வைத்து ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 

அந்தவகையில் சிவசேனை கட்சியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சியின் தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சிவசேனை கட்சியின் எம்.எல்.ஏ.வாகவுள்ள ஆதித்ய தாக்கரே  ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்திலும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.