முன்னதாக, பயன்படுத்தாமல் இருந்த பாலம் ஒன்றை, பட்டப் பகலில், மக்கள் நடமாட்டம் இருக்கும்போதே, ஒரு கும்பல் பாலத்தைக் கழற்றி வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளது. அதன்பிறகுதான் அவர்கள் திருட்டுக் கும்பல் என்பதே மக்களுக்குத் தெரிய வந்தது. ஒட்டுமொத்த பாலத்தையும் பட்டப் பகலில் ஒரு கும்பல் தங்கள் கண் முன்னே திருடிச் சென்றதை நினைத்து அந்தக் கிராமத்து மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு நடத்திய விசாரணையில், நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் தலைமையிலான திருட்டுக் கும்பல் கைது செய்யப்பட்டு, பாலத்தின் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது வேறுகதை.