பிரேசில் பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி; 11 பேர் காயம்

பிரேசிலில் இரண்டு பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். 
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..
Published on
Updated on
1 min read

பிரேசிலில் இரண்டு பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். 

பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சான்டோ மாகாணத்தில், அராகுரூஸ் என்ற நகரில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு இரண்டு பள்ளிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

ராணுவ உடை அணிந்து வந்த அவர்கள் பள்ளிகளில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். 

அராகுரூஸில் உள்ள 2 பள்ளிகளில் நடந்த இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாகாண மேயர் தெரிவித்துள்ளார். 

பிரேசில் அதிபர்  லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com