நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரேசில் பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி; 11 பேர் காயம்

பிரேசிலில் இரண்டு பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். 

News image

கோப்பிலிருந்து..

Updated On :26 நவம்பர் 2022, 3:48 am

DIN

பிரேசிலில் இரண்டு பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். 

பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சான்டோ மாகாணத்தில், அராகுரூஸ் என்ற நகரில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு இரண்டு பள்ளிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

ராணுவ உடை அணிந்து வந்த அவர்கள் பள்ளிகளில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். 

அராகுரூஸில் உள்ள 2 பள்ளிகளில் நடந்த இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாகாண மேயர் தெரிவித்துள்ளார். 

பிரேசில் அதிபர்  லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.