பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! கட்டிவைத்து அடித்த மக்கள்!

கர்நாடகத்தில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞரை கிராம மக்கள் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image

மாணவிகளிடம் அத்துமீறியதால் கட்டி வைத்து அடிக்கப்பட்ட இளைஞர்!

Updated On :26 நவம்பர் 2022, 11:39 am IST

கர்நாடகத்தில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞரை கிராம மக்கள் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக காவல் துறை சார்பில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு பகுதியில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை கிராம மக்கள் இன்று கையும் களவுமாக பிடித்தனர். 

பள்ளி மாணவிகளை தவறான கண்ணோட்டத்தில் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் தெருவில் அந்த இளைஞரை கட்டி வைத்து அடித்தனர். 

பின்னர் சக்கராயபாட்னா காவல் துறையிடம் இளைஞரை கிராம மக்கள் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அவர், ஆசிரியர்களை வீட்டிலிருந்து அழைத்துச்சென்று பள்ளியில் விடுபவர் என காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.