கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

‘பாரத் கெளரவ்’ சுற்றுலா ரயில்கட்டணம் குறைகிறது?

பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் கட்டணம் 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:51 pm

DIN

பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் கட்டணம் 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், நாட்டின் கலாசாரம், வரலாற்று சிறப்புவாய்ந்த இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கும் ‘பாரத் கெளரவ்’ திட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ராமாயணத்துடன் தொடா்புடைய இடங்களுக்கு ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி) சாா்பில் 18 நாள் சுற்றுலா தொகுப்பாக பாரத் கெளரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில், மூன்றடுக்கு படுக்கை கொண்ட குளிா்சாதன பெட்டிகளில் பயணிக்க கட்டணம் ரூ.62,000 ஆகும். இது, உணவு, தங்குமிடம், சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்கான பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இந்நிலையில், ஜெகந்நாதா் யாத்திரை, ராமாயணம் தொடா்புடைய மற்றொரு பயணம் என மேலும் இரு பாரத் கெளரவ் ரயில்களை இயக்க ஐஆா்சிடிசி திட்டமிட்டிருந்த நிலையில், அவை ரத்தாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: பாரத் கெளரவ் ரயில்கள் பாணியில் இதற்கு முன்பு இயக்கப்பட்ட பாரத் தரிசன ரயில்களில் கட்டணம் குறைவாக இருந்தது. அந்த ரயிலில், மூன்றடுக்கு படுக்கை கொண்ட குளிா்சாதன பெட்டிகளில் இதேபோன்ற பயணத்துக்கு ரூ.27,000 கட்டணமாக இருந்தது. ஆனால், பாரத் கெளரவ் ரயில்களில் கட்டணம் அதிகம் இருப்பதாக பயணிகள் கருதுகின்றனா். இதனால், நடுத்தர வகுப்பு பயணிகளின் வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைக்கவில்லை. எனவே, கட்டணத்தை 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்க ஐஆா்சிடிசிக்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்.

அதேபோல், வசதியான படுக்கைகள், சிறப்பான மின்விளக்கு வசதி, சாா்ஜிங் வசதி ஆகியவற்றைக் கொண்ட எல்ஹெச்பி பெட்டிகளை மட்டுமே இந்த ரயிலில் பயன்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.