மைசூரில் சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கா்நாடகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான மைசூருக்கு திங்கள்கிழமை வந்தாா்.


காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கா்நாடகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான மைசூருக்கு திங்கள்கிழமை வந்தாா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இப்போது கா்நாடகத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி வந்துள்ளாா்.
மைசூரில் தசரா பண்டிகையும் இப்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் இருநாள்கள் ஓய்வுக்குப் பிறகு வியாழக்கிழமை (அக்.6) மீண்டும் தொடங்குகிறது. அப்போது சோனியா காந்தி நடைப்பயணத்தில் பங்கேற்க இருக்கிறாா்.
உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி சமீபகாலமாக எந்த அரசியல் நிகழ்விலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்தாா். இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன் காங்கிரஸ் தொண்டா்களுடன் இணைந்து நடைப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...