கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வைஷ்ணோ தேவி கோயிலில் வழிபாடு செய்தார் அமித் ஷா

ஜம்மு - காஷ்மீர் சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கத்ராவில் உள்ள வைஷ்ணோ தேவி கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார்.

News image
Updated On :4 அக்டோபர் 2022, 7:11 am

DIN


ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கத்ராவில் உள்ள வைஷ்ணோ தேவி கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார்.

கத்ராவுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த அமித் ஷாவுடன், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் உடன் இருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, குகைக் கோயிலுக்கு இவர் வருகை தருவது இதுவே முதல்முறையாகும்.

இவரது ஜம்மு -காஷ்மீர் பயணத்தில் வைஷ்ணோ தேவி கோயில் வழிபாடும், நவராத்திரியின் முக்கிய நிகழ்வான 9ஆம் நாள் விழாவும் ஒன்றாக வந்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.

கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, ரஜௌரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அமித் ஷா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.