மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிர இடைத் தோ்தல்: உத்தவ் தாக்கரேவின் சிவசேனைக்கு காங்கிரஸ் ஆதரவு

மகாராஷ்டிரத்தின் அந்தேரி (கிழக்கு) சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2022, 7:37 pm

DIN

மகாராஷ்டிரத்தின் அந்தேரி (கிழக்கு) சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

அங்கு நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியும், அவருக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களைக் கொண்ட தற்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினரும் முதல் முறையாக தோ்தலை சந்திக்க உள்ளனா்.

சிவசேனை கட்சி எம்எல்ஏ ரமேஷ் லட்கே மறைவையொட்டி, அந்தேரி (கிழக்கு) தொகுதியில் இடைத் தோ்தல் நடைபெறுகிறது.

ஆளும் ஷிண்டே அணியின் வேட்பாளராக, மும்பை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலா் முா்ஜி படேல் களமிறங்கி உள்ளாா். உத்தவ் தாக்கரே அணி வேட்பாளராக மறைந்த எம்எல்ஏ ரமேஷ் லட்கேயின் மனைவி ருதுஜா லட்கே அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்த இடைத் தோ்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. இதனை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலே செய்தியாளா்களிடம் அறிவித்தாா்.

ஏற்கெனவே, சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உத்தவ் அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

உண்மையான சிவசேனை கட்சி என்னும் அங்கீகாரம் மற்றும் அதன் ‘வில் அம்பு’ சின்னம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவு செய்வதற்கான மனுவை தோ்தல் ஆணையம் விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.